ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2020-09-30 06:59 GMT   |   Update On 2020-09-30 06:59 GMT
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையையொட்டி நந்திகேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜையையொட்டி நந்திகேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது.

அப்போது நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்சாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News