செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை சுங்ககேட் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் குளித்தலை வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 30) என்பவரை அவரது பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்றதாக அவரை கைது செய்தனர். பின்னர் கடையில் வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.