உள்ளூர் செய்திகள்
.

போச்சம்பள்ளி அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் கைது

Published On 2022-04-15 07:50 GMT   |   Update On 2022-04-15 07:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வாலிப் பட்டி பக்கமுள்ளது வேலவள்ளி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கலையரசு (வயது 59). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் வேலன் (22) உறவினர்கள். இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்து வருகிறது.

சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில், கலையரசன் தாக்கப்பட்டார். அதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து வேலவன் தரப்பை சேர்ந்த ஹரீஷ் (20), சுதா (25), தவமணி (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News