ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவிலில் பாலாபிஷேகம், அர்ச்சனை ரத்து
தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலையாக பரவல் வேகமெடுப்பதால் திருப்பரங்குன்றம் கோவிலில் தற்காலிகமாக பாலாபிஷேகம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் அர்ச்சனை தடைசெய்யப்பட்டுள்ளது.
உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலையாக பரவி வருகிறது. ஆகவே சில கட்டுப்பாடுகளுடன் ஆலயங்களில் வழிபாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதான அபிஷேகமாக செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு மகா பாலாபிஷேகம் நடைபெறும்.
பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பாத்திரங்களில் பால் கொண்டு வந்து முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு பாலாபிஷேகம் நடத்தி வழிபடுவார்கள். இதனையொட்டி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலையாக பரவல் வேகமெடுப்பதால் தற்காலிகமாக பாலாபிஷேகம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் அர்ச்சனை தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பாத்திரங்களில் பால் கொண்டு வந்து முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு பாலாபிஷேகம் நடத்தி வழிபடுவார்கள். இதனையொட்டி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலையாக பரவல் வேகமெடுப்பதால் தற்காலிகமாக பாலாபிஷேகம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் அர்ச்சனை தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.