உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2021-12-17 10:24 GMT   |   Update On 2021-12-17 10:24 GMT
ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதியம்புத்தூர்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன்காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 29), பெயிண்டர். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், தினேஷ்(6), மோனிஷா (2) என 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் சுப்பிரமணியன் நேற்று இரவு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News