ஆன்மிகம்
பெருமாள்

திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Published On 2020-09-11 06:48 GMT   |   Update On 2020-09-11 06:48 GMT
திருப்பதி மலையில் ஏறும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லிய படி மலையேறினால் நம் வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறும்.
ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே
ச்ரத்தயாஸஹ தம் பவந்தம்
அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம...
க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே"

பொருள் : பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.
Tags:    

Similar News