ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2021-11-24 05:07 GMT   |   Update On 2021-11-24 05:07 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனைத் திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி இணை அதிகாரி வீரபிரம்மன் கலந்து கொண்டார்.

காலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனைத் திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, சர்வ தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவில் துணை தாசில்தார் கவுஸ்தூரிபாய் மற்றும் பிரபாகர் ரெட்டி, கண்காணிப்பாளர் சேஷகிரி, கோவில் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News