செய்திகள்
மாணவிகள் பாலியல் பலாத்காரம்: முதியவர், வாலிபர் போக்சோவில் கைது
கோவையில் 2 மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதியவர், வாலிபரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஐயப்பன் நகரை சேர்ந்தவர் சேக் பாவா (வயது 61). இவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சேக் பாவா வசித்து வந்த பகுதியில் 9-ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி சேக்பாவா பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அவர் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் மாணவியுடன் அடிக்கடி போனிலும் பேசி வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியின் தாய் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் சேக்பாவா அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவியின் தாய் அவரிடம் விசாரித்த போது தன்னை மிரட்டி சேக் பாவா கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறினார்.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சேக் பாவாவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்...
ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது வாசிக் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
நட்பாக பழகியதால் சிறுமியின் வீட்டுக்கு முகமது வாசிக் அடிக்கடி சென்று வந்தார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற முகமது வாசிக் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பெற்றோர் வீட்டுக்கு திரும்பியதும் நடந்த சம்பவத்தை கூறி சிறுமி கதறி அழுதார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் முகமது வாசிக்கை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஐயப்பன் நகரை சேர்ந்தவர் சேக் பாவா (வயது 61). இவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சேக் பாவா வசித்து வந்த பகுதியில் 9-ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி சேக்பாவா பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அவர் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் மாணவியுடன் அடிக்கடி போனிலும் பேசி வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியின் தாய் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் சேக்பாவா அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவியின் தாய் அவரிடம் விசாரித்த போது தன்னை மிரட்டி சேக் பாவா கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறினார்.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சேக் பாவாவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்...
ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது வாசிக் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
நட்பாக பழகியதால் சிறுமியின் வீட்டுக்கு முகமது வாசிக் அடிக்கடி சென்று வந்தார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற முகமது வாசிக் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பெற்றோர் வீட்டுக்கு திரும்பியதும் நடந்த சம்பவத்தை கூறி சிறுமி கதறி அழுதார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் முகமது வாசிக்கை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.