செய்திகள்
கோப்புபடம்

கடலூர் அருகே சாராயம் கடத்திய 3 பேர் கைது

Published On 2021-02-19 12:47 GMT   |   Update On 2021-02-19 12:47 GMT
கடலூர் அருகே சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி மற்றும் போலீசார் பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனையிட்டனர். அதில் சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் கடத்திய கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை (வயது 50) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் சாராயம் கடத்தியதாக புதுப்பாளையத்தை சேர்ந்த சரவணன் (48), பாஸ்கர் (42) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 65 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News