உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தில் எட்டியம்மன் திருவிழா எடுத்த படம்.

குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தில் எட்டியம்மன் திருவிழா

Published On 2022-05-06 10:33 GMT   |   Update On 2022-05-06 10:33 GMT
குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தில் எட்டியம்மன் திருவிழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவீதி உலா வந்தார்.
குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மேல் முட்டுக்கூர் ஊராட்சி தட்டாங்குட்டை கிராமத்தில் ஸ்ரீஎட்டியம்மன் திருவிழா நடந்தது.

திருவிழாவை முன்னிட்டு அனைத்து கிராம ஆலயங்களுக்கும் அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீ எட்டியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவீதி உலா வந்தார்.
 
வழிநெடுகிலும் பக்தர்கள் பக்தியுடன் அம்மனை தரிசித்தனர் வேண்டு தலுக்காக ஏராளமான ஆடுகள் பலியிடப்பட்டன தொடர்ந்து ராட்சத பூமாலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட்டது.

தொடர்ந்து பல ஆயிரம் எலுமிச்சைகளால் ஆன மாலை அம்மனுக்கு சாத்தப்பட்டது.
Tags:    

Similar News