ஆன்மிகம்
மகா மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
சோழநகர் மகா மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
பெண்ணாடம் அருகே உள்ள சோழநகர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் விரதமிருந்து அலகு குத்தி, பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கடந்த 6-ந் தேதி பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டி விரதமிருக்க தொடங்கினர். அதனை தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு தினசரி காலை, மாலை நேரத்தில் பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மேலும் இரவில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.
இதையடுத்து விரதமிருந்த திரளான பக்தர்கள் நேற்று முன்தினம் முக்குலத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் இருந்து அலகு குத்தியும், பால்குடம், தீச்சட்டி எடுத்தும் சோழநகர் மகா மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இதில் சோழநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
அதன்படி இந்த ஆண்டு கடந்த 6-ந் தேதி பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டி விரதமிருக்க தொடங்கினர். அதனை தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு தினசரி காலை, மாலை நேரத்தில் பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மேலும் இரவில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.
இதையடுத்து விரதமிருந்த திரளான பக்தர்கள் நேற்று முன்தினம் முக்குலத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் இருந்து அலகு குத்தியும், பால்குடம், தீச்சட்டி எடுத்தும் சோழநகர் மகா மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இதில் சோழநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.