செய்திகள்
கொள்ளை

சத்தியமங்கலத்தில் வங்கியிலிருந்து எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அபேஸ்

Published On 2019-09-18 10:09 GMT   |   Update On 2019-09-18 10:09 GMT
சத்தியமங்கலத்தில் வங்கியிலிருந்து எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அபேஸ் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்த மாரனூரை சேர்ந்தவர் சண்முகம் விவசாயி. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் எடுத்தார். பணத்தை அவர் ஒரு பையில் வைத்து வெளியே வந்தார். இதை நோட்டமிட்ட ஒரு மர்ம ஆசாமி அவரை பின் தொடர்ந்து உள்ளான்.

சத்தி ஈஸ்வரன்கோவில் அருகே தான் வந்த ஸ்கூட்டரின்சீட்டின்அடியில் வைத்து பூட்டி அங்கு தனது நண்பரை பார்க்க சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம ஆசாமி ஸ்கூட்டரின் பூட்டை லாவகமாக பட்டப்பகலில் உடைத்து உள்ளே இருந்த 1 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை திருடி தப்பி சென்று விட்டான்.

மீண்டும் ஸ்கூட்டரை எடுக்க வந்த சண்முகம் அங்கு பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வங்கி அருகே வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News