தொழில்நுட்பம்

சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்கும் ஃபேஸ்புக்

Published On 2019-04-19 06:16 GMT   |   Update On 2019-04-19 06:16 GMT
ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கொண்ட சாதனங்களை உருவாக்கி வருகின்றன. சிரி, கூகுள் அசிஸ்டண்ட், கார்டனா போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகள் நம்மிடையே பிரபலமாகி வரும் நிலையில், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளில் ஆர்வம் செலுத்தாமல் இருந்தன.

அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி குழுவினர் 2018 ஆம் ஆண்டு முதல் செயற்கை நுண்ணறி சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை உருவாக்கி வருகின்றன.



ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை உருவாக்கி அவற்றில் ஃபேஸ்புக்கின் சொந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான பணிகள்  ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

அந்த வகையில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை போர்டல் ஸ்மார்ட் டிய்ப்ளே, ஆகுலஸ் ஹெட்செட்கள் மற்றும் எதிர்கால ஆக்மென்டெட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களில் வழங்கப்படம் என தெரிகிறது. முன்னதாக 2015 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் எம் அசிஸ்டண்ட் சேவையை மெசஞ்சரில் அறிமுகம் செய்தது.
Tags:    

Similar News