செய்திகள்
வெள்ளகோவில் சாலையில் பேரிகாடுகள் அமைக்க கோரிக்கை
வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் சாலை விரிவாக்க பணி முடிந்து சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி திருச்சி-கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தற்போது வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் சாலை விரிவாக்க பணி முடிந்து சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளகோவில் நகர்ப்பகுதியில் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் நடைபெற்று வருகிறது.
உயிர் சேதமும் நடந்து வருகிறது.இந்த சாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலை ஆகும். இந்த சாலை வழியாக தான் கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், திருப்பூர்,கோவை, ஊட்டி, கிழக்கு மார்க்கமாக கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை ஆகும்.
அதனால் நகர் பகுதியில் விபத்துகளை தவிர்க்க நகரின் இருபுற எல்லைகளில் சாலையின் குறுக்கே வேக தடுப்பான் (பேரி காடு)அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.