செய்திகள்
ரவீந்திரநாத் எம்.பியின் கார் மீது தாக்குதல்- அ.ம.மு.க நிர்வாகி கைது
தேனி அருகே ரவீந்திரநாத் எம்.பியின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய அ.ம.மு.க நிர்வாகியை போலீசார் கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி எம்.பி ரவீந்திரநாத் போடி அருகில் உள்ள பெருமாள் கவுண்டன்பட்டியில் வாக்குச்சாவடியை ஆய்வு செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கும்பல் அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் ரவீந்திரநாத்துடனும் தகராறு செய்தனர்.
இதுகுறித்து கார் டிரைவரான பெரியகுளம் தென்கரையை சேர்ந்த பாண்டியன் என்பவர் போடி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கல்வீசி தாக்கிய அ.ம.மு.க நிர்வாகியான மாயி என்பவரை கைது செய்தனர். மேலும் பெரியபாண்டி, ராஜாங்கம், ஜெயேந்திரன், மணிகண்டன், விஜயன், கார்த்திக் உள்பட 17 பேர் மீது தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி எம்.பி ரவீந்திரநாத் போடி அருகில் உள்ள பெருமாள் கவுண்டன்பட்டியில் வாக்குச்சாவடியை ஆய்வு செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கும்பல் அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் ரவீந்திரநாத்துடனும் தகராறு செய்தனர்.
இதுகுறித்து கார் டிரைவரான பெரியகுளம் தென்கரையை சேர்ந்த பாண்டியன் என்பவர் போடி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கல்வீசி தாக்கிய அ.ம.மு.க நிர்வாகியான மாயி என்பவரை கைது செய்தனர். மேலும் பெரியபாண்டி, ராஜாங்கம், ஜெயேந்திரன், மணிகண்டன், விஜயன், கார்த்திக் உள்பட 17 பேர் மீது தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.