செய்திகள்
முக்கூடல் அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் பலி
முக்கூடல் அருகே கால்வாயில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
சேரன்மாதேவி அருகே உள்ள மேல கூனியூர் கிராமத்தை சேர்ந்தவர் கசமுத்து (வயது 25). இவர் முக்கூடல் அருகே உள்ள கன்னடியன் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.