செய்திகள்
அன்பழகன்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6.85 லட்சம் மோசடி- முசிறி பஸ் கண்டக்டர் கைது

Published On 2021-06-25 10:29 GMT   |   Update On 2021-06-25 10:29 GMT
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 வாலிபர்களிடம் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் வாங்கி மோசடி செய்த முசிறி அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
உப்பிலியபுரம்:

எரகுடியை சேர்ந்தவர் அருண்பாண்டியன்(வயது 26). இவருடைய உறவினர் முசிறியை அடுத்த சிட்லறையை சேர்ந்த அன்பழகன்(44). இவர் முசிறி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் அருண்பாண்டியன் மற்றும் அவருடைய நண்பர்கள் அருண்குமார், ராஜா ஆகியோருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக அன்பழகன் கூறியதாக தெரிகிறது. இதை நம்பி 3 பேரும் சேர்ந்து ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்தை அன்பழகனிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்த 3 பேரும் அவரிடம் பணத்தை திருப்பி தரும்படி கேட்டனர். ஆனால் அவர் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேதனை அடைந்த அவர்கள் இதுபற்றி உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அன்பழகனை நேற்று கைதுசெய்தனர்.
Tags:    

Similar News