செய்திகள்
மிக்-29

ரஷியாவிடமிருந்து 33 அதிநவீன போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்

Published On 2019-08-29 14:20 GMT   |   Update On 2019-08-29 14:20 GMT
ரஷியாவிடமிருந்து 33 அதிநவீன மிக்-29 மற்றும் சுகோய்-30 ரக போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக ரஷியாவிடமிருந்து புதிதாக போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

அதன்படி, ரஷியாவிடம் இருந்து 21 மிக்-29 ரக போர் விமானங்களும், 12 சுகோய்-30 ரக அதிநவீன போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



இந்த வகை போர் விமானங்கள் ஏற்கனவே இந்தியாவிடம் இருக்கும்போதும் தற்போது வாங்க உள்ள விமானங்கள் அதிநவீன ரேடார் மற்றும் உயர் ரக பாதுகாப்பு உபகரணங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள இரு நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகளிடையேயான கூட்டத்திற்கு முன்னர் போர் விமானங்களை வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News