உள்ளூர் செய்திகள்
கோப்பு காட்சி

கல்லூரி மாணவி காணவில்லை தேட வேண்டாம் என போனில் பேசியதால் பெற்றோர் அதிர்ச்சி

Published On 2022-05-07 08:38 GMT   |   Update On 2022-05-07 08:38 GMT
கல்லூரி மாணவி காணவில்லை தேட வேண்டாம் என போனில் பேசியதால் பெற்றோர் அதிர்ச்சி
குழித்துைற, மே. 7-

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கல்லுகெட்டி இடைக்குளம் பகுதியை சேர்ந்தவர் வர்த்தனன். இவரது மகள் அர்ஷா (வயது19).
கல்லூரி மாணவி.

இவர் களியக்காவிளை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 27-ந் தேதி வழக்கம் போல் காலையில் வீட்டில் இருந்து அர்ஷா கல்லூரிக்கு சென்றார்.  ஆனால் மாலையில் அவர்  வீடு திரும்ப வில்லை.

இதனால் சந்தேகமடைந்த  பெற்றோர் கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது  அர்ஷா கல்லூ ரிக்கு வந்து சென்றதாக கூறினர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த  பெற்றோர்  அக்கம்பக்கத்திலும்,  உறவினர்களிடமும் விசாரித்தனர்.

ஆனால் அர்ஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.   இந்த நிலையில் அர்ஷா திடீரென தொலைபேசி மூலம் பெற்றோரிடம் பேசி உள்ளார். தான் கோவையில் உள்ளதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். 
மற்றொரு முறை பேசும்போது, மதுரையில் இருப்பதாக கூறி உள்ளார். இதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. மேலும் அவர் யாருடன் இருக்கிறார்? வீட்டை விட்டு வெளியேறியது ஏன் என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக  மார்த்தாண்டம் போலீசில்  அர்ஷாவின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்  அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி அர்ஷாவை தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News