செய்திகள்
கருஞ்சிறுத்தை

குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை தூக்கி சென்ற கருஞ்சிறுத்தை

Published On 2021-03-03 11:01 GMT   |   Update On 2021-03-03 11:03 GMT
வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளது. கருஞ்சிறுத்தையை பிடிக்கும் வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியே விட வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர்:

நீலகிரி 60 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்ட மலை மாவட்டமாகும் இங்கு சிறுத்தை, கரடி, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் குன்னூர் வண்டிசோலை மற்றும் அளக்கரை சாலையில் எமகுண்டு குடியிருப்பு உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.நேற்று நள்ளிரவு ஊருக்குள் புகுந்து ஒரு கருஞ்சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் என்பவரது நாயை கவ்விச்சென்றது.

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த காண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதைப் பார்த்து உறைந்துபோன பொதுமக்கள் கட்டப்பெட்டு வனத்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இது எமகுண்டு காலனி பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் இதற்கு முன்பு தமிழக அரசு கொடுத்து விலையில்லா ஆடுகளை கருஞ்சிறுத்தை கவ்விச்சென்றது.

இது குறித்து வனத்துறைக்கு தெரிவித்தோம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது ஊருக்குள் புகுந்து நாயை வேட்டையாடியுள்ளது. அடுத்தடுத்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

இதனையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளது. கருஞ்சிறுத்தையை பிடிக்கும் வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியே விட வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News