செய்திகள்
திருவள்ளூர் அருகே குட்கா பொட்டலங்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் அரண்வாயல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தான் வைத்திருந்த பெரிய பையுடன் ஓட்டம் பிடித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டிச்சென்று பிடித்து விசாரணை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் 1,550 பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக அரண்வாயல் குப்பத்தை சேர்ந்த முருகன் (வயது 47) என்பவரை கைது செய்தனர்.