உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
செங்கோட்டை பாலவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை கே.சி.ரோடு, எல்.எஸ். கரையாளர் வளாகத்தில் சகுந்தலா, எல் எஸ் சட்டநாதகரையாளர் நிறுவப்பட்ட பாலவிநாயகர் ஆலயத்திற்கு புதிதாக கல்மண்டபம் மற்றும் புதிய விமானம் அமைத்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ ரமேஷ் பட்டர், அர்ச்சகர் துரை பட்டர் நடத்தினர்.தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், மகா அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாந்தி மருத்துவமனை மருத்துவர் திருவன், மருத்துவர் சாந்தி மற்றும் அவர்களின் குடும்பத்தார் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் காந்தியவாதி விவேகானந்தன் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகி ராம்மோகன், வழக்கறிஞர் வெங்கடேசன், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பக்தர்கள். ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
செங்கோட்டை கே.சி.ரோடு, எல்.எஸ். கரையாளர் வளாகத்தில் சகுந்தலா, எல் எஸ் சட்டநாதகரையாளர் நிறுவப்பட்ட பாலவிநாயகர் ஆலயத்திற்கு புதிதாக கல்மண்டபம் மற்றும் புதிய விமானம் அமைத்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ ரமேஷ் பட்டர், அர்ச்சகர் துரை பட்டர் நடத்தினர்.தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், மகா அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாந்தி மருத்துவமனை மருத்துவர் திருவன், மருத்துவர் சாந்தி மற்றும் அவர்களின் குடும்பத்தார் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் காந்தியவாதி விவேகானந்தன் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகி ராம்மோகன், வழக்கறிஞர் வெங்கடேசன், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பக்தர்கள். ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.