தொழில்நுட்பம்
பிஎஸ்என்எல்

விரைவில் துவங்க இருக்கும் புது பிஎஸ்என்எல் சேவை

Published On 2020-08-27 05:27 GMT   |   Update On 2020-08-27 05:27 GMT
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக இணையவழி சேவை ஒன்றை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் இணையவழி தொலைகாட்சி சேவை (இண்டர்நெட் ப்ரோடோகால் டெலிவிஷன்-ஐபிடிவி) துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

புதிய ஐபிடிவி சேவை முதற்கட்டமாக கேரளா மாநிலத்தில் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சேவை இரண்டு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு அதன்பின் வணிக ரீதியில் வெளியிடப்படும் என தெரிகிறது. 

கேரளா மாநிலத்தின் எர்னாகுளம், அலப்பி மற்றும் த்ரிசூர் என மூன்று வட்டாரங்களில் வழங்கப்பட இருக்கிறது. ஐபிடிவி சேவைக்கான முதற்கட்ட சோதனை ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 வரை நடைபெற இருக்கிறது. 

பிஎஸ்என்எல் ஐபிடிவி சேவைக்கான சோதனையில் கலந்து கொள்ள செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விருப்பம் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு அனைத்து சேனல்களும் இலவசமாக வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Tags:    

Similar News