செய்திகள்
கோப்புபடம்

உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-09-18 12:17 GMT   |   Update On 2021-09-18 12:17 GMT
உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் திருச்சி ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 52). விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாகவும், இதற்காக பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் சரியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், வலி தாங்க முடியாமல் வீட்டில் கடலை செடிக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் முருகனை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News