செய்திகள்
கோப்புப்படம்

மராட்டியத்தில் மேலும் 2 மந்திரிகளுக்கு கொரோனா - ஒரே மாதத்தில் 6 மந்திரிகள் பாதிப்பு

Published On 2021-02-20 22:46 GMT   |   Update On 2021-02-20 22:46 GMT
மராட்டியத்தில் மாநில சுகாதாரத்துறை மந்திரி, நீர்வளத்துறை இணை மந்திரி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

மராட்டியத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மந்திரிகள் மற்றும் பிரபலங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், அனில் தேஷ்முக், சதேஜ் பாட்டீல், ராஜேந்திர சிங்னே ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, நீர்வளத்துறை இணை மந்திரி பச்சு கடு ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பச்சு கடு 2-வது முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் ஒரு மாதத்தில் 6 மந்திரிகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, பா.ஜனதா எம்.பி.யான அவரது மருமகள் ரக்சா கட்சேவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏக்நாத் கட்சே 2-வது முறையாக தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதேபோல காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலேவின் அலுவலகத்தில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News