செய்திகள்
கைது

தர்மபுரி மாவட்டத்தில் மதுவிற்ற 7 பேர் கைது

Published On 2020-01-14 13:45 GMT   |   Update On 2020-01-14 13:45 GMT
தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தனமாக மதுவிற்ற 7 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில், தருமபுரி மாவட்ட போலீசார் கள்ளத்தனமாக மதுவிற்பவர்கள் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அரசுக்கு புறம்பாக மதுபாட்டிலை வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மதுவிற்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் பெரும்பாலையில் 3 பேரும், ஏரியூர், காரிமங்கலம், அதியமான் கோட்டை மற்றும் தொப்பூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் இவர்களிடம் இருந்து 70-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News