செய்திகள்
தற்கொலை

திருத்தேரியில் விஷம் குடித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2021-04-04 12:46 GMT   |   Update On 2021-04-04 12:46 GMT
திருத்தேரியில் மது குடிக்கும் பழக்கத்தை கண்டித்ததால் விஷம் குடித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த திருத்தேரி குப்பை காரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 55). இவர் மறைமலைநகர் அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்த சுந்தரமூர்த்தி பூச்சி மருந்து (விஷம்) குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுந்தரமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News