ஆன்லைன் மூலம் பிரதமர் மோடி, மாணவர்களுடன் நாளை கலந்துரையாடுகிறார்
புதுடெல்லி:
‘‘பரிக்ஷா பே சர்ச்சா’’ (தேர்வுகள் பிரச்சினை அல்ல) என்ற தலைப்பில் பிரதமர் மோடி பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் 2018-ம் ஆண்டு முதல் கலந்துரையாடி வருகிறார்.
இதில், தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் ‘ஆன்லைன்’ மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடி பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். இந்த ஆண்டு மாணவர்களுடன் பிரமதர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பல்வேறு கேள்விகளுடன் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்கும் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சி நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவுடன் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடி பேசி இருப்பதாவது:-
உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாக இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அது முடியவில்லை.
எனவே நமது கலந்துரையாடல் ஆன்லைன் வழியாக நடக்கிறது. வாழ்வின் கனவுகளை நிறைவேற்ற விரும்பும் மாணவர்கள் தேர்வை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.