செய்திகள்
மரணம்

பாளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளம்பர் பலி

Published On 2020-09-14 14:08 GMT   |   Update On 2020-09-14 14:08 GMT
பாளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளம்பர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

பாளை தியாகராஜநகர் மல்லிகா காலனியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது39). பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 9-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பாளை ஆயுதப்படை மைதானம் அருகே சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தில் எதிர்பாரத விதமாக மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நீலகண்டன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News