செய்திகள்
மின்னல்

மேற்கு வங்காளத்தில் சோகம் - ஒரே நாளில் மின்னல் தாக்கி 26 பேர் பலி

Published On 2021-06-07 17:52 GMT   |   Update On 2021-06-07 17:52 GMT
மேற்கு வங்காளத்தில் மே மாத இறுதியில் ஏற்பட்ட யாஸ் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மக்கள் முயன்று வருகின்றனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதில் ஹூக்ளியில் 11 பேர், மூர்ஷிதாபாத் 9 பேர், பங்குரா, கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூரில் தலா 2 பேர் என மின்னல் தாக்கி மொத்தம் 26 பேர் பலியாகினர் என தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட யாஸ் புயலால் ரெயில், விமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News