செய்திகள்
சிவகாசியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
சிவகாசியில் குடும்ப தகராறு காரணமாக ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்தவர் சிவராஜன் (வயது 44), ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்றும் சிவராஜன் மது அருந்தி வந்தார். இதனை மனைவி ராஜலட்சுமி கண்டித்தார்.
இதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மனவேதனை அடைந்த சிவராஜன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்தவர் சிவராஜன் (வயது 44), ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்றும் சிவராஜன் மது அருந்தி வந்தார். இதனை மனைவி ராஜலட்சுமி கண்டித்தார்.
இதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மனவேதனை அடைந்த சிவராஜன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.