செய்திகள்
தற்கொலை

சிவகாசியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Published On 2019-11-04 07:21 GMT   |   Update On 2019-11-04 07:21 GMT
சிவகாசியில் குடும்ப தகராறு காரணமாக ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்தவர் சிவராஜன் (வயது 44), ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்றும் சிவராஜன் மது அருந்தி வந்தார். இதனை மனைவி ராஜலட்சுமி கண்டித்தார்.

இதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மனவேதனை அடைந்த சிவராஜன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News