ஆன்மிகம்
நத்தம் அருகே வேட்டைகாரன் சாமி கோவில் திருவிழா

நத்தம் அருகே வேட்டைகாரன் சாமி கோவில் திருவிழா

Published On 2021-03-22 04:47 GMT   |   Update On 2021-03-22 04:47 GMT
நத்தம் வேட்டைகாரன் சாமி கோவில் திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் வேட்டைகாரன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து மேளதாளம் முழங்க, வர்ணக் குடை அலங்காரத்துடன் வேட்டைகாரன் சாமி மற்றும் குதிரைகள், மதலை சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நத்தம் புறநகர் பகுதியில் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாமி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சேர்வீடு கிராமத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News