உள்ளூர் செய்திகள்
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிகள் தேர்வு எழுதிய காட்சி.

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.

Published On 2022-05-06 10:38 GMT   |   Update On 2022-05-06 10:38 GMT
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது.
வேலூர், 

தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை . இந்நிலையில் , இந்த ஆண்டு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால் நடப்பு ஆண்டுக்கான அரசு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. 

அதன்படி , மாநிலம் முழுவதும் 10-ம் பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.
வேலூர் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 9,528 மாணவர்கள் 9,401 மாணவிகள் உள்பட 18,929 பேர் தேர்வு எழுதினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 77 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .204 பள்ளிகளை சேர்ந்த 15,551 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 96 மையங்களில் 16,966 பேர் ேதர்வு எழுதினர்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 5 கல்வி மாவட்டங்களில் 504 உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் 17,318 மாணவர்கள், 16,075 மாணவிகள் என மொத்தம் 33,393 மாணவர்கள் 139 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதினர்.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உட்பட 8 பேர் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் 144 கண்காணிப்பு அலுவலர்கள் மேற்பார்வையில் தேர்வு நடைபெறுகின்றன.

தேர்வுக்கான வினாத்தாள்கள் மையத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் உதவியுடன் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, தேர்வு தொடங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை விட்டு அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் தண்ணீர் பாட்டில், பேனா, ஹால்டிக்கெட் கொண்டு செல்ல அனுமதிக்க பட்டனர். எலெக்ட்ரானிக், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்க படவில்லை.
Tags:    

Similar News