செய்திகள்
கொரோனா வைரஸ்

கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா

Published On 2021-11-29 23:41 GMT   |   Update On 2021-11-29 23:41 GMT
கர்நாடகாவில் பள்ளியில் படித்து வரும் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.
ஹாசன்:

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் சன்னராயப்பட்டினா நகரில் அமைந்துள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில் படித்து வரும் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

எனினும், அவர்கள் அனைவரும் அறிகுறி இல்லாமல் காணப்படுகின்றனர்.  இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News