ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நளன் குளம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நளன் குளத்தில் நீராட அனுமதிக்க கோரிக்கை

Published On 2021-02-01 09:31 GMT   |   Update On 2021-02-01 09:31 GMT
ஆன்லைன் முன்பதிவு முறை முடிந்து போனதால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நளன் குளத்தில் நீராட ஆனுமதிக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளனர்.
ஆன்லைன் முன்பதிவு முறை முடிந்து போனதால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நளன் குளத்தில் நீராட ஆனுமதிக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டயில் கூறியதாவது:-

காரைக்கால் திருநள்ளாறில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை வரும் சனிபெயர்ச்சி விழா கடந்த டிசம்பர் 27-ந் தேதி நடந்து முடிந்தது. கொரோனா பாதுகாப்பை கருதி, மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் இணைந்து, சனீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்கியது.

இதனால், சுமார் 10 லட்சம் பக்தர்கள் வரவேண்டிய கோவிலில், வெறும் 1 லட்சம் பக்தர்கள் மட்டுமே வந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த கெடுபிடியால், கோவில் வருமானம் மற்றும் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் நகர் பகுதியில் உள்ள ஏராளமான வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

அதுமட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில் இருந்து இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி பக்தர்களுக்கு நளன் குளத்தில் புனிதநீராட ஏற்பாடுகள் செய்யாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கோவில் ஆகம விதிகள்படியும், கடந்த பல நூற்றாண்டுகளாகவும், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் நளன்குளத்தில் புனித நீராடி, தங்கள் உடைகளை, குளத்தில் வீசிவிட்டு செல்வதுதான் வழக்கம்.

குறைந்தபட்சம், புனித நீராட முடியாதவர்கள், நளன் குளத்தில் இறங்கி, தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு, குளத்தையும் அங்குள்ள விநாயகரையும் வணங்கிவிட்டு, தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று விட்டு, கடைசியாகதான் சனீஸ்வரனை தரிசனம் செய்வார்கள். அப்போதுதான் அவர்களுக்கு முழு திருப்தி கிடைக்கும். மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் இணைந்து, சனிப்பெயர்ச்சி மற்றும் அதற்கு அடுத்த 48 நாட்கள் சனீஸ்வரனை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு, கொரோனா காலத்தை கருத்தில்கொண்டு, நளன் குளத்தில் புனிதநீராட அனுமதி மறுக்கப்பட்டது.

இது ஒரு வகையில் ஏற்புடையது என்றாலும் 48 நாட்கள் மற்றும் ஆன்லைன் முன்பதிவு முைற முடிந்து போனதால், உடனே நளன்குளத்தை திறந்து பக்தர்கள் புனித நீராட அனுமதிக்க வேண்டும். குறைந்த பட்சம், நளன் குளத்து தண்ணீரை, அனைத்து பக்தர்கள் தலையில் கோவில் நிர்வாகம் தெளிக்கவோ, அல்லது பக்தர்களே எடுத்து தலையில் தெளித்து கொள்ளவோ, அவசியம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதை கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, நவீனமுறையில், பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் ஏதாவது ஒரு பொது இடத்திலோ அல்லது நளன் குளம் அருகிலோ, தாராளமாக செய்யலாம் என்கிறபோது கோவில் நிர்வாகம் அதற்கான ஏற்பாட்டை அவசியம் செய்யவேண்டும். இல்லையேல், சனீஸ்வரன் கோவில் முன்பு பக்தர்களை ஒன்றுதிரட்டி பா.ம.க. மாபெரும் போராட்டத்தை நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News