செய்திகள்
மெட்ராத்தியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகளும், 100க்கும் மேற்பட்டவர்களும் பங்கேற்றனர்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் அருகே மெட்ராத்தியில் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தமிழ்நாடு அரசின் வருமுன் காப்போம் திட்டத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் பல இடங்களில் நடக்கிறது.
இதில் ஒரு பகுதியாக மெட்ராத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் நடந்த இந்த முகாமில் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதில் இதயநோய் சிகிச்சை, பொது மருத்துவம், சர்க்கரை நோய், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, புற்று நோய், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை.
மேலும் இ.சி.ஜி., மற்றும் ஸ்கேன், பரிசோதனை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், தோல் நோய், குடும்ப நல சிகிச்சை, பால்வினை நோய் பரிசோதனை, சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகளும், 100க்கும் மேற்பட்டவர்களும் பங்கேற்றனர்.