செய்திகள்
கைது

ஆலங்குளம் அருகே சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த முதியவர் கைது

Published On 2021-09-09 10:09 GMT   |   Update On 2021-09-09 10:09 GMT
ஆலங்குளம் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஆலங்குளம்:

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகை குளத்தை சேர்ந்தவர் சுப்பையா(வயது 65). இவர் 5 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

உடனே அந்த சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் சென்று கூறியுள்ளாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News