ஆன்மிகம்
பரமத்தி கோட்டையண்ண சாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பரமத்தி கோட்டையண்ண சாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2021-08-17 06:59 GMT   |   Update On 2021-08-17 06:59 GMT
பரமத்தி கோட்டையண்ண சாமி கோவிலில் சாமிகளுக்கு புனித தீர்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பரமத்தியில் உள்ள கோட்டையண்ண சாமி, அழகுநாச்சியம்மன், ஏரிக்கரை முனியப்பன் ஆகிய சாமிகளுக்கு ஆடி மாதத்தின்‌ கடைசி நாளான நேற்று கோவில் நிர்வாகத்தினர் மட்டும் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து சாமிகளுக்கு புனித தீர்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் கோவில் நிர்வாகத்தினர் மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News