செய்திகள்
கேரளா, கர்நாடகாவில் சுழன்று அடிக்கும் கொரோனா அலை: 35 ஆயிரத்தை தாண்டியது இன்றைய பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேரளாவில் இன்று 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 35,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் மட்டும் 19,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
14142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 270 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 3,49,496 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11,10,025 பேர் குணமடைந்துள்ளனர். 15,306 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்றைய அறிக்கையின்படி புதிதாக 38,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5259 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,44,301 பேர் குணமடைந்துள்ளனர்.