செய்திகள்
கோப்புபடம்

அவினாசி பேரூராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகள் தேர்வு முகாம் - இன்று முதல் நடக்கிறது

Published On 2021-09-15 04:38 GMT   |   Update On 2021-09-15 04:38 GMT
அவிநாசி பேரூராட்சி பகுதியில் இன்று 3, 4, 5-வது வார்டு மக்களுக்கு பேரூராட்சி சமுதாய கூடத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.
அவிநாசி:

ஏழை மக்கள் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கக்கோரி தொடர்ந்து மனு வழங்கி வருகின்றனர். இதையடுத்து பயனாளிகள் தேர்வில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அவிநாசி பேரூராட்சி பகுதியில் இன்று 3, 4, 5-வது வார்டு மக்களுக்கு பேரூராட்சி சமுதாய கூடத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.

நாளை 16-ந்தேதி 6, 7, 8, 9 மற்றும் 15வது வார்டு மக்களுக்கு மங்கலம் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 2, 10, 11, 12, 13 மற்றும், 14வது வார்டு மக்களுக்கு  கஸ்தூரிபாய் வீதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் முகாம் நடத்தப்படுகிறது.

வரும்17- ந்தேதி 1, 16, 17 மற்றும் 18வது வார்டு மக்களுக்கு முத்துச்செட்டிபாளையம், திருவள்ளுவர் நினைவு தொடக்கப்பள்ளியில் முகாம் நடத்தப்படுகிறது.

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் இன்று 1, 2, 3-வது வார்டு மக்களுக்கு தேவராயம்பாளையம் பூங்காவில் முகாம் நடக்கிறது.

நாளை 16-ந்தேதி 4 முதல் 11-வது வார்டு மக்களுக்கான முகாம் திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திலும் 12 முதல் 15-வது வார்டு மக்களுக்கான முகாம் ராக்கியாபாளையம் பள்ளி அருகில் உள்ள பூங்காவிலும் நடத்தப்பட உள்ளது.

முகாம் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை நடக்கிறது. விண்ணப்பிக்கும் பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சமாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்போர், குடும்ப தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி இருப்பு கையேடு நகல், குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News