செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

விளையாட்டில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.67 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-12-16 08:51 GMT   |   Update On 2020-12-16 08:51 GMT
விளையாட்டில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:

ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த அரசு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு இந்த அரசு ஊக்கத்தொகை அளித்து வருகிறது. விளையாட்டுத்துறை மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முதல்-அமைச்சர் ஆணை பிறப்பித்தார்.

விளையாட்டில் மாணவ-மாணவிகளை சிறுவயதிலிருந்தே ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து கிராம ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தேவைப்படும் பட்சத்தில் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம்.

பாடத்திட்டங்கள் குறைப்பதை பொறுத்தவரை 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 50 சதவீதமும், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் உடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவு அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News