செய்திகள்
கோப்புபடம்

இட்டமொழி அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திருட்டு

Published On 2020-10-18 14:46 GMT   |   Update On 2020-10-18 14:46 GMT
இட்டமொழி அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டி ராமகிருஷ்ணாபுரத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று இரவில் இந்த அலுவலகத்தின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்த மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த 2 பேட்டரிகள், ஒயர்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். 

இதுகுறித்த புகாரின்பேரில், வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News