உள்ளூர் செய்திகள்
அம்பை பெரியகுளம் காலனி நடுத்தெருவை சேர்ந்த பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
அம்பை பெரியகுளம் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் இசக்கியம்மாள் (வயது16).
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இசக்கியம்மாள் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரது பெற்றோர் இசக்கியம்மாளை அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரித்து வருகின்றனர்.
அம்பை பெரியகுளம் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் இசக்கியம்மாள் (வயது16).
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இசக்கியம்மாள் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரது பெற்றோர் இசக்கியம்மாளை அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரித்து வருகின்றனர்.