செய்திகள்
ஜி.கே.வாசன்

மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

Published On 2021-06-08 04:18 GMT   |   Update On 2021-06-08 04:18 GMT
ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசியை அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நேற்று தனது நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக, ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசியை அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக கொடுக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். இது மக்களுடைய அச்சத்தை போக்கி இருக்கிறது.

மேலும் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இந்தியாவில் தடையில்லாமல் போடுவதற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும், நாட்டில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருப்பது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News