செய்திகள்
சர்பராஸ் அகமது, ஷாகித் அப்ரிடி

சர்பராஸ் அகமதை டெஸ்ட் கேப்டனில் இருந்து நீக்க வேண்டும்: ஷாகித் அப்ரிடி

Published On 2019-09-20 10:42 GMT   |   Update On 2019-09-20 10:42 GMT
பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து சர்பராஸ் அகமதை நீக்க வேண்டும் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அவரது கேப்டன் பதவி பறிபோகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இலங்கை தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிக்கான கேப்டனில் இருந்து சர்பராஸ் அகமதுவை நீக்க வேண்டும் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷாகித் அப்ரிடி கூறுகையில் ‘‘சர்பராஸ் அகமது டெஸ்ட் கேப்டனாக ஆகாமல் இருந்தால், அது அவருக்கு சிறந்ததாக இருக்கும். ஏனென்றால், மூன்று வகை கிரிக்கெட்டிலும் அவர் கேப்டனாக இருந்தால், அது மிகப்பெரிய சுமையாக இருக்கும். ஒயிட் பந்து கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து வருகிறார்’’ என்றார்.
Tags:    

Similar News