செய்திகள்
தற்கொலை

பெரணமல்லூர் அருகே மதுவில் எலி மருந்தை கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2021-04-05 17:34 GMT   |   Update On 2021-04-05 17:34 GMT
உடல் நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்த வாலிபர் மதுவில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேத்துப்பட்டு;:

சேத்துப்பட்டை அடுத்த அரியபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). அவர் உடல் நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் மதுவில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார். தான் இறந்து விடுவோம் என பயம் ஏற்பட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு சென்றாா். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News