உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

முத்தூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக் கைது

Published On 2021-12-08 07:27 GMT   |   Update On 2021-12-08 07:27 GMT
கோபாலின் 13 வயது மகளை மிரட்டி ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
வெள்ளகோவில்:

முத்தூர் அருகே உள்ள நம்பகவுண்டம்பாளையம் பொய்யேரிமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது 13 வயது மகள் முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கோபால் முத்தூரில் பழம் வியாபாரம் செய்து வருகின்றார்.

கோபாலுக்கு இவரது மகள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில் முத்தூர் அருகே உள்ள வயலூர் பகுதியை சேர்ந்த காந்தமலை மகன் செல்வம் (23) சென்னாகல்மேடு என்ற இடத்தில் இருசக்கர வாகன ஒர்க்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் பெண் குழந்தையும், 3 மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. இவர் கோபாலின் 13 வயது மகளை மிரட்டி ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து வெள்ளகோவில் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி ஆகியோர் செல்வத்தை கைது செய்து போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

நீதிபதி மெக்கானிக் செல்வத்தை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறுமியை பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News