ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம் நாளை நடக்கிறது

Published On 2021-11-15 08:35 GMT   |   Update On 2021-11-15 08:35 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) கைசிக துவாதசி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை கோவிலில் சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகள் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை சூரிய உதயத்துக்கு முன்பாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
Tags:    

Similar News