ஆன்மிகம்
செம்மினிபட்டியில் வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
ஆதி வடிவுடையாள் சமேத ஆதி ஈஸ்வரர் கோவிலில் வராகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி சிறுமலை அடிவாரத்தில் ஆதி வடிவுடையாள் சமேத ஆதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கருடபஞ்சமியை முன்னிட்டு கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி ஆதி வடிவுடையாள் சமேத ஆதிஈஸ்வரன், ராகு கேது நிவர்த்தி ஸ்தலம் நாகம்மாள், வராகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஆதி முத்துக்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஆதி முத்துக்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.