செய்திகள்
கோப்புப்படம்

மதுரை: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

Published On 2021-11-29 08:33 GMT   |   Update On 2021-11-29 08:33 GMT
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது போக்சோ சட்டம் பாய்ந்த நிலையில், ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த சிறுமியின் தந்தை கணேச மூர்த்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா கணேச மூர்த்திக்கு ஆயுள்தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News